சிறிலங்கா கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் பெண் ஒருவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி விட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக குறித்த சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.