About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 24, 2012

வவுனியாவில் குவிந்துள்ள படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நிமலரூபனின் உடலுக்கு மக்கள் அஞ்சலி!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின் கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன இந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர்.

நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறையினர் படையினர் மற்றும் படை புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் அங்சலி செலுத்த முடியாத சூழலில் இறுதி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிட தக்கது.

நிமலரூபனின் இறுதி நிகழ்வின் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சத்திலும் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ன அச்சம் காரணமாகவே பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறப்புச் செய்திகள்

May 19, 2013

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்....
May 19, 2013

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,....
May 19, 2013

பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்