
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியவிளான் இராணுவ முகாம் குழு நேற்று மாலை மூன்று வெளிநாட்டவர்களை கைது செய்து இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.