கிழக்கு மாகண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மூன்று வருட பதவிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 130 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தழிழ்த் தேசிய கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு ஆரம்பித்த பின்பு காணமல் போன 130 பேரை பற்றி என்ன கூறப்போகிறார். அவரால் இவர்களை மீட்டுத்தர முடியுமா? அவரது ஆட்சிக் காலத்தில் இதனை ஆராய்வதற்காக ஏதாவது ஒரு குழுவை அவர் நியமித்தாரா? அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று கொடுத்த பணத்தில் தென் பகுதியில் கடுகதி வீதி அமைத்துவிட்டு, எங்கள் பகுதியில் கண்துடைப்புக்கு இரண்டு மூன்றுஹாப்பட் வீதி, ஓரிரு பாலங்கள் அமைத்துள்ளார்கள். அவைகளை கண்டு எமது மக்கள் ஒரு போதும் ஏமாந்துவிட மாட்டார்கள்.
ஒரு வருடத்தின் முன்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வெசாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில் “பௌத்த சிந்தனையைப் பின்பற்றி தமிழ் மக்கள் உண்மையான தமிழராக வாழ பழகிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார் இதை பௌத்தர்கள் இதுவரை கூறியதில்லை.