About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 22, 2012

யேர்மனி Aalen நகரில் திரையிடப்பட்ட "21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை"

யேர்மனி Aalen நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இளையோர்களுக்கான இசை விழாவில் " DOUBLE-A-FESTIVAL 2012 " பல்தரப்பட்ட புலம்பெயர் மக்களுக்கான அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வில் Aalen தமிழ் மக்கள் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக "21  ஆம்  நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" மற்றும் இலங்கையில் கொலைக்களம்" ஆகிய ஆவணங்களை திரையிட்டனர் .


"21  ஆம்  நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" எனும் காணொளி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி செல்வன் கோகுலன் அவர்களின் தயாரிப்பில் யேர்மன்  மொழியில் உருவாக்கப்பட்டது .

 

காலநிலை சீராக இல்லாத நிலையிலும்  இவ் நிகழ்வில் கலந்து கொண்ட யேர்மனிய மக்கள் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை அறிந்து கண்ணீர் சிந்தியதோடு தமிழ் மக்களுக்கான ஆதரவையும் தெரிவித்தனர் . அத்தோடு Aalen  தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் தற்காலிக நிலைமைகளையும் சுட்டிக்காட்டியதோடு ஏனைய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்கள் .












Aalen தமிழ்  மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் யேர்மனிய மக்களுடன் இணைந்து தமிழின அடையாளத்தை வெளிப்படுத்தும் முகமாக பங்குகொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது .

நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்