About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 21, 2012

டென்மார்க்கில் கறுப்பு யூலை-2012 கவனயீர்ப்பு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது - டென்மார்க் தமிழர் பேரவை

சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக்கருவறுப்புக்கும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக 'கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்' இன்று (21.07.2012) டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், 'கறுப்பு யூலை' இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப்பிரசுரங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கி கவனயீர்ப்பு செய்யப்பட்டது. அத்துடன், அடித்துப் படுகொலை செய்யப்பட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட்டு மக்களுக்கு பெருமளவில் வழங்கி, விளக்கப்பட்டது. மேலும், இன்றிலிருந்து கவனயீர்ப்பு நிகழ்வு தொடர்ந்து டென்மார்க்கில் மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்வில் டென்மார்க் தமிழர்கள் ஒன்றுகூடி, சிங்களப் பேரினவாதத்தால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு கோரப்பலியாகிய அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூர்ந்தனர்.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்