முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் குண்டொன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவனின் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வௌ்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, களப்பு பகுதியில் கரையொதுங்கிய குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கிறார்.