About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

மட்டக்களப்பு வாகன விபத்தில் செங்கலடி மத்திய கல்லூரி மாணவன் பலி!

Jun 4, 2012
மட்டக்களப்பு கொம்மாதுறை வாகன விபத்தில் செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவன் பலிகியுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் மஞ்சள் கடவையை கடக்கமுற்பட்ட மாணவன் ஒருவர் மீது நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதனால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றுள்ள இவ் விபத்தில் தெய்வநாயகம் சியாம்பவன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனம் வேறுஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அப்பிரதேசப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் மாணவனின் தாயாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்மாதுறையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவனின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்