
நோர்வே அமைச்சரவை உறுப்பினராகும் தகமை அவருக்கு வழங்காத நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான நோர்வேயின் தூதுவராக நியமனம் கிடைக்கும் என, எரிக் சொல்ஹெய்ம்
எதிர்பார்த்திருந்தார்.
இருந்த போதும், அந்த பதவியினை எரிக் சொல்ஹெய்ம்மிற்கு வழங்க நோர்வே அரசு மறுத்துள்ளது.
அந்த பதவிக்கு பிறிதொருவரை நியமிக்க நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், நோர்வே தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதுவர் கடந்த டிசெம்பர் மாதம் இலங்கைக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.