யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் நிந்துயா கனகேஸ்வரன் அவர்கள் டொச் மொழியில் தனது உரையில் "முள்ளிவாய்க்காலின் செய்தி" எனும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நாட்களை ஏன் நாம் நினைவு கொள்ள வேண்டும் என்ற கேள்வியோடு கருத்துகளை முன்வைத்தார்
பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல ,.
எந்த ஒரு தமிழனும் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல ,
உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்துக்கான பயணத்தில் எந்த ஒரு பாரிய அழிவு ஏற்பட்டாலும் அவர்கள் தமது கொள்கையை சாக விட மாட்டார்கள் என்பதுக்கான சாட்சியே "முள்ளிவாய்க்கால்".
முள்ளிவாய்க்கால் எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியை அடையாளப்படுத்துகின்றது . முள்ளிவாய்க்கால் எமக்கு சிங்கள இனவெறி அரசின் இராணுவ பலத்தை காட்டவில்லை ., மாறாக எமது மக்களின் அசைக்கமுடியாத தார்மீக நம்பிக்கையை அடையாளப்படுத்துகின்றது .
அவர்களின் சுதந்திரத்துக்கான கொள்கையை அங்கு தங்கள் உயிர்களை அதற்காக அர்ப்பணித்தவர்கள் வகுத்தார்கள் .உயிரோடு வாழும் நாம் அல்ல .
உயிரோடு வாழும் எமக்கு யேர்மனியில் , பிரான்சில் , பிரித்தானியாவில் அல்லது அமெரிக்காவில் இருந்து அந்த கொள்கையை மாற்றவோ அல்லது புதிதாக வகுக்கவோ அதிகாரம் அல்ல . முள்ளிவாய்க்காலில் அவர்கள் நினைத்திருந்தால் அனைவரும் உயிர் வாழ்ந்திருக்கலாம் , ஆனால் கொள்கை இறந்திருக்கும் அத்தோடு தமிழினம் அடியோடு அழிக்கப்பட்டிருக்கும்.ஆனால் அவர்கள் மாறாக தமது உயிர்களை கொடுத்து தமிழினத்தின் கொள்கையை வாழ வைத்தார்கள் . இது தான் எமக்கான முள்ளிவாய்க்காலின் செய்தி என அவர் கூறினார் .
தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி சார்பில் திருமது சுயா செந்தில் அவர்கள் தாயகத்தில் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசு மேற்கொண்ட கொடூரமான சம்பவங்களை யேர்மன் மொழியில் விளக்கினார் .
தொடர்ந்து யேர்மனிய இளையோர்களது சிறப்புக் கவிதைகள், உரைகள், நாடகம் ஆகியன நடைபெற்றன.
மீள் எழுச்சியினை அடையாளப்படுத்தும் விதமாக ´´வாகை´´ என்ற பத்திரிகை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
சிறப்புரை ஆற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்கள் முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது எனும் கருத்தில் தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ந்தும் தமது விடுதலைப் போராட்டத்தில் முழுமையான பங்கு வகிக்க வேண்டும் அத்தோடு ஆழமான நம்பிக்கை கொள்ளவேண்டும் எனவும் , அத்தோடு எவ்வித வல்லரசு நாடுகளின் சதிக்குளும் வீழ்ந்துவிடாமல் எமது தலைவரின் ஆழமான சிந்தனையை பின்பற்றி தமிழீழம் மீளமைக்கும் வரை உறுதி தளராமல் போராடுவோம் என்று கூறி தனது உரையின் முடிவில் ´´ எழுகதிர்´´ என்ற இறுவட்டினையும் வெளியிட்டு வைத்தார்.
இறுதியாக; எவ்வேளையிலும் தமிழர்களின் அடையாளங்களையும், எமது தேசியத்தலைவரது வழிகாட்டலையும் விடுத்து ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியோடு ´´ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்´´ என்ற தாரக மந்திரம் முழங்க நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
தகவல் :
ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
--
Vereinsregister Nr. 31006 B
Bundesallee 160, 10715 Berlin
......................................................................
www.vetd.info | info@vetd.info
Tel: +49 (0) 30 60972472
Fax: +49(0) 30 843 150 33