கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த 6 வயது தமிழ் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளான். மொனராகலை – எல்ல பிரதேசத்தில் கிதவலவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இந்த சிறுவனைப் பெண் ஒருவரே கல்லால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த சிறுவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு எட்டு மணியளவில் உயிரிழந்துள்ளான்.
எல்ல, கிதலவத்தை தோட்ட 4ஆம் லயன் முகவரியைச் சேர்ந்த 6 வயதான சிவகுமார் மனோஜ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த 04ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பெண், பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மாணவனை குறித்த பெண் எதற்காக கல்லால் தாக்கினார் என்பது குறித்த தகவல்கள் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.