யாழ். நல்லூர் சங்கிலியன் சிலை வீதியில் பகல் வேளையில் இரு ஆசிரியர்களின் தங்கச்சங்கிலிகளை உந்துருளிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை முறையிடப்பட்டுள்ளது.
வீதியில் மிதிவண்டிகளில் சென்றுகொண்டிருந்த இந்த இரு ஆசிரியர்களையும் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், அவர்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.