நேற்று(5.5.2012) சனிக்கிழமை அன்று யேர்மன் தலைநகரத்தில் போருக்கும் மற்றும் அரச அடக்குமுறைக்கும் எதிராக பல்லின மக்கள் ஆர்ப்பாடத்தில் இறங்கினர் . இவ் நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பில் பெர்லின் மக்கள் பிரதிநிதி அவர்களும் இணைந்துகொண்டார் .இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டின் பிரச்சனை விடையமாக மக்கள் கண்டனம் தெரிவித்தனர் .அத்தோடு இஸ்ரேல் நாட்டுக்கு யேர்மன் அரசாங்கமும் ஆயுதஉபகரணங்கள் விற்பதையும் மக்கள் கண்டித்தனர் இவ் நாடுகளின் பின்னணியில் தமது பிராந்திய நலம் சார் அரசியலை முன்னகர்த்தும் சில வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது .
இவ் கண்டன பேரணியில் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Annete Groth அவர்களும் கலந்து கொண்டார் .இறுதியாக "தமிழ்மக்களின் உரிமைப் போராட்டமும் சர்வதேசத்தின் ஈடுபாடும்" எனும் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு வழங்கப்பட்டது .




தகவல்
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
www.vetd.info