
இந்தியாவும் தான் காரணம் என்று தமிழ் மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கான முயற்சியினை கூட்டமைப்பு எடுத்திருப்பதனையும் இதற்கு உதயன் பத்திரிகையினைத் துணைக்கு அழைத்திருப்பதனையும் இன்றைய உதயன் செய்தி ஊடாக அவதானிக்க முடிகிறது.
இதுவரையில் நடைபெற்ற பேச்சுக்களில் எதுவித ஆரோக்கியமான முடிவுகளும் எட்டப்படவில்லை, பேச்சுக்குப் போகமுன்னர் கூட்டமைப்பிடம் அரச தரப்பு வழங்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட்டாலேயே தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் பரீசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வந்திருந்த நிலையில் இன்று “தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை” என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது
தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான சாத்தியப் பாடுகள் அதிகம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் மேலும் அறிய முடிகிறது.