யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக புற்றுநோயாளர்களின் வீதம் அதிகரித்து வருகிறது. இதற்கு தரைக்கீழ் நீரைப் பயன்படுத்தும் ஒரு காரணமாகும்.

இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ந. ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் எமது பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களில் கூடுதலானவர்களுக்கு சிறு நீரகங்களில் கல் மற்றும் புற்றுநோய் என்பன ஏற்படுவதற்கான காரணம் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களில் அதிகமான புற்றுநோயாளர்கள் நிலக் கீழ் நீரைப் பருகுவதால் அந்நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகமாகக் காணப்படுவதே அவர்களின் நோய்க்கான காரணமாகும்.
குடாநாட்டு மக்கள் இத்தகைய நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மழைநீரைச் சேமித்து வைத்து பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் கிளிநொச்சியில் இருந்து இரணைமடுக்குளத்து நீரைக் குடாநாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தின் மூலமும் ஓரளவுக்கு எமது மக்கள் நிவாரணம் பெற முடியும் எனத் தெரிவித்தார்.