07.04 .2012 அன்று யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நான்காவது வாரமாக “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு ” பல்வேறு நகரங்களில் நடந்து வரும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு Wuppertal மற்றும் Göttingen நகரங்களில் நிகழ்ந்தது . தாயக சிறுவர்களின் அவல நிலைமைகளையும் அத்தோடு அவர்களின் எதிர்கால ஆசைகள் என்ன என்பதை விளக்கும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.மோசமான காலநிலையாக இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாது அங்கு வாழும் தமிழ் இளைஞர்கள் அவர்களது பத்திரிகைப் பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். யேர்மனிய மக்களிடம் கலந்துரையாடி தாயக நிலைப்பாட்டையும் விளக்கப்படுத்தினர். இளையோர்களின் மனித நேய வேலைத்திட்டத்தை கண்டறிந்த யேர்மன் மக்கள் மிகவும் ஆவலாக அவர்களுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனவழிப்பை பற்றி வேதனையுடன் அறிந்துகொண்டார்கள் .
தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு வரும் 13 .04 .2012 அன்று Berlin நகரத்தில் நடைபெறுகிறது என்று அறியத்தருகின்றோம்.
நன்றி
தொடர்புகட்கு
media@tyo-germany.com
www.tyo-germany.com







