About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Apr 11, 2012

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மும்பைக்கு வெற்றியை தேடித்தந்த ரோஹித் சர்மா.

ஐபிஎல் சீசன் 5-ன் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கிறிஸ்டியன் பந்துவீசினார். முதல் பந்தை ஃபிராங்க்ளின் பவுண்டரிக்கு அனுப்பி, இரண்டாவது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

எஞ்சிய 3 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நான்காவது பந்தில் சிக்ஸர் விளாசினார், ரோஹித் ஷர்மா. ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது, அவர் விளாசிய சிக்ஸரில் மும்பை த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். பொல்லார்டு 24 ரன்களையும், ராயிடு 19 ரன்களையும் எடுத்தனர்.

முன்னதாக, டெக்கான் சார்ஜர்ஸ் தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, தவான் 41 ரன்களையும், கிறிஸ்டியன் 39 ரன்களையும், ஒயிட் 30 ரன்களையும் எடுத்தனர்.

மும்பை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முனாப் படேல் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும், பொல்லார்டு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மொத்தம் 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பைக்கு இது 2-வது வெற்றியாகும். டெக்கானுக்கு இது இரண்டாவது தொடர் தோல்வி.

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்