About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Feb 6, 2012 / பகுதி: செய்தி /

சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு..!

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.
64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடுகின்ற போதும் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.
அந்த வகையில் யேர்மனியில் இலங்கை தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் அமைந்திருக்கும் Berlin , Frankfurt நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன .
பெர்லின் நகரத்தில் எமது கவனயீர்ப்பு நிகழ்வை முறியடிக்க சிறிலங்கா தூதரகம் தனது அரவணைப்பில் திட்டமிட்டு சில சிங்களவர்களை ஒழுங்கு செய்து எமக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள் . சிங்களவர்கள் தமது தூதரகத்தின் முன்னாலே தாமே நிண்டு “நல்லிணக்கத்தை ஏற்படுத்து , பிரிவினையை தூண்டாதே” எனும் பதாகைகள் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் செய்தது , தமக்கு தாமே கண்டனம் செய்வதாக யேர்மன் மக்களால் கருதப்பட்டது .
இருந்தும் ஒரு சில நிமிடங்களில் குளிர் தாங்க முடியாமல் அவர்கள் அங்கெ இருந்து ஓடிச் சென்றார்கள் அவர்களுக்கு இலங்கை தூதரகம் தேநீர் , மதுபானங்கள் , உணவு கொடுத்து நிறுத்தி வைத்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது .

ஆனால் எமது உறவுகள் இரு நகரங்களிலும் குறைவான எண்ணிக்கையில் கூடியிருந்தாலும் உணர்வுரீதியாக பல மணி நேரங்கள் பலத்த குளிரிலும் பனி மழையிலும் தமது கண்டனத்தை முன்னெடுத்தார்கள் .இலங்கை தூதரகம் தமது கொண்டாட்டதிற்கு பல யேர்மனிய அரச அதிகாரிகளுக்கு அழைப்புதல் அனுப்பியிருந்தாலும் , அவர்கள் அங்கு சமூகம் தரவில்லை .யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் முற்கூட்டியே பல அரசியல் கட்சிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் ஊடகங்களுக்கும் இது விடையமாக கடிதங்கள் அனுப்பப் பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .அத்தோடு கவனயீர்ப்பு நிகழ்விலும் யேர்மனிய மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் , இலங்கையில் கொலைக்களம் காணொளி யேர்மன் மொழியிலும் வழங்கப்பட்டது .

புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.
நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை தொடர்ந்தும் கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக் எடுத்துச் சொல்வோம் நாம் ஒவ்வொரு தமிழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . “விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது.”

எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது.
தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது.

தகவல் : யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

 

 


May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்