மலேரியா நோயானது முன்னர் நம்பப்பட்டதை விட இரு மடங்கான ஆட்களை கொல்கிறது என்று மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில் பிரசுரமான புதிய ஆய்வு பற்றிய தகவல் ஒன்று கூறுகிறது.பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிதியத்தின் நிதி அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்டதாகும்.2010 ஆம் ஆண்டில் மலேரியாவால் 12 லட்சம் மக்கள் இறந்துள்ளதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டைவிட இந்த எண்ணிக்கை இருமடங்காகும்.
மேலும் சிக்கலான கணினி மாதிரிகளை கொண்டும், வேறு நோய்களால் இறந்தவர்கள் என்று முன்பு கருதப்பட்டு, ஆனால் பின்னர் அவர்கள் மலேரியாவால்தான் இறந்தார்கள் என்று அறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை கொண்டும் கணிக்கப்பட்ட புதிய தரவுகளின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.2010 ஆம் ஆண்டு நாம் நினைத்ததை விட மோசமானதாக இருந்தாலும், அது முன்னர் இருந்த நிலைமைகளை விட பரவாயில்லை.
எப்படியிருந்த போதிலும் இந்த விடயங்களில் முன்னேற்றம் இருந்திருக்கிறது என்று லான்செட் ஆசிரியரான றிச்சர்ட் ஹோர்ட்டன் கூறுகிறார்.
மலேரியாவவை கட்டுப்படுத்தாலாம். ஆனால் அதனை ஒழிக்க முடியாது. நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் கூட, 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மலேரியாவால் ஒரு ஆண்டில் இறக்கும் ஆட்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்தை விடக் குறைக்க முடியாது.