About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 28, 2012 / பகுதி: செய்தி /

களுத்துறை சிறையில் தமிழ்க் கைதிகள் அவல நிலையில்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்கென அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய எம்.பி.க்களிடத்திலேயே இவர்கள் மேற்கண்டவாறு முறையிட்டுள்ளனர். அத்துடன் தம்மைப் பார்வையிட வரும் உறவினர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எம்.பிக்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மெகசின் சிறைசாலையில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தமது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டிருப்பதாகவும் கைதிகள் தம்மிடம் முறையிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இடநெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் நித்திரைகொள்வதற்கான வசதிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கென அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் அப்பாதுரை விநாயகமூர்த்தி ஆகிய எம்.பி.களிடத்திலேயே இவர்கள் மேற்கண்டவாறு முறையிட்டுள்ளனர். அத்துடன் தம்மை பார்வையிட வருகின்ற உறவினர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எம்.பி.க்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகசின் சிறைசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலவரத்தினையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டி ருப்பதாகவும் கைதிகள் தம்மிடம் முறையிட்டதாக செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.