About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 28, 2012 / பகுதி: செய்தி /

பெப்ரவரி 4! சிறி லங்காவின் சுதந்திர தினம்! பெப்ரவரி 4 சிறி லங்காவின் தமிழர் இனப்படுகொலை தினம்!

சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்கா சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது, பாதுகாப்பு சபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறி லங்காவில் நடைபெற்ற இறுதிகட்ட போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை குழு ஒன்று முலம் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகிறது, சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகிறது, சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூறுகிறது.சிறி லங்கா அரசின் கற்று அறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி இருக்கிறார்கள், இதன் அடிப்படையில் சிறி லங்கா அரசு ஒரு குற்றமிழைத்த நாடாகவே பார்க்க படுகிறது.

சிறி லங்கா போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிராக குற்றம் இழைத்த நாடு என்று இந்த உலகமே கூறி நிற்கும் போது- சிறி லங்காவை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு சபையில் இருக்கும் ரஷ்யா, சீனாவும், இந்திய போன்ற நாடுகளும் முன்னிலையில் நிற்கின்றன. இந்த சர்வதேச போட்டியில் தமிழர் நாம் சிக்கி நிற்கின்றோம். இன்று உலகமே சிறி லங்கா குற்றமிழைத்த நாடு என்று கூறி இருக்கும் நிலையில் சிறி லங்கா போர் குற்றம் மட்டும் இழைக்கவில்லை 1948ல் அல்ல 1917ல் இருந்து சிங்கள தேசிய இனவாதிகளால் ஒரு திட்டமிடப்பட்ட செயல்பாட்டில் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். யூதர்கள் எப்படி 1948ல் இருந்து பாலஸ்தீன மக்களை தமது நிலங்கள், குடிமனைகளில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் நிலங்களில் காலனிகளை உருவாக்கினார்களோ அதே வடிவத்தை நாம் சிறி லங்காவில் பார்க்க கூடியதாக இருக்கிறது.

சிறி லங்காவில் 1948இல் ஆரம்பித்த இனவாத படுகொலைகள் சிறி லங்கா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தொடர்ச்சியான இன அழிப்பு, சிங்களமயப்படுத்தல், 2009இல் முள்ளிவாய்காலில் ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பின் உச்ச நிலையை கண்டுள்ளது. இதே நிலை 1967இல் பாலஸ்தீன மக்களின் ஆயுதப் போரட்டத்தின் முடிவின் பின் இஸ்ரேல் அரசின் யூத மயமாக்கலின் உச்சகட்டத்தில் பாலஸ்தீன மக்களிடம் இன்று அவர்களின் நிலப்பகுதியில் 18% தான் பாலஸ்தீன மக்களின் கையில் உள்ளது.

1948இல் இருந்து சிறி லங்காவில் தமிழர்களுக்கு என்ன நடந்தது?
அங்கு நடந்தது ஒரு இனத்தை அடியோடு அழிக்கும் நீண்டகால செயல்திட்டம். சிறிலங்கா சரித்திரத்தில், மகாவம்சத்தில் எழுதப்படாது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.  சிறி லங்காவில் நடந்தது, நடந்து கொண்டு இருப்பது ஒரு இனப்படுகொலை என்பதை இன்று நாம் உரத்து கூறவேண்டி காலம். இலையேல் பாலஸ்தீன மக்கள் போல் 18% நிலப்பகுதியில் வாழும் அளவுக்கு தமிழர்கள் நாம் தள்ளப்பட்டு விடுவோம். உலக தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், சிறி லங்கா ஒரு குற்றமிழைத்த நாடு என்று எல்லோரும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் நாம் சிறி லங்காவில் தமிழர்களை முற்றாக அழிக்கும் இனப்படுகொலை நடந்து கொண்டிருகிறது. உலத்தில் பல பகுதிகளில் நடந்து மறக்கப்பட்டிருக்கும் பல இனப்படுகொலைகளில் தமிழர்களின் இனப்படுகொலையும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. உலகத்தில் மிகவும் பழமையான இனம், பழமையான கலாச்சாரம், பழமையான நாகரீகம்- தமிழர் அழிந்து விட நாம் காரணமாக இருந்து விடகூடாது.

சிறி லங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்கவும், சர்வதேசம் தமிழர்களுக்கு நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை வலியுரத்தவும், தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேசத்தினது என்பதை வலியுறுத்தி நாம் எமது மௌனம் கலைத்து போராடுவோம். பெப்ரவரி 4!  சிறி லங்காவின் சுதந்திர தினம்!
பெப்ரவரி 4  சிறி லங்காவின் இனப்படுகொலை தினமாக மாற்றுவோம். எல்லோரும் ஒரே குரலாக பெப்ரவரி 4 சிறி லங்காவின் இனப்படுகொலை தினம் என்று வலியுறுத்துவோம். தமிழீழ மக்களை குற்றவாளியின் கையில் இருந்து விடுதலை செய்ய ஒரே குரல் கொடுப்போம். வடக்கு கிழக்கு தமிழீழ பிரதேசங்களை மீண்டும் இணைக்க குரல் கொடுப்போம்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.