
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற உலங்கு வான் ஊர்தி விபத்தில் நேட்டோ படை வீரர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் விபத்து தான் என்றும் தாக்குதல் சம்பவம் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பலியான வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் இல்லை.
இதேபோல் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானில் நேட்டோ படை விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் சுமார் 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ___