தமிழகத்திலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற வார இதழான நக்கீரன் அலுவலகம், இன்று காலை முதல் தொடர்ச்சியாகப் பலமுறை கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
அத்துடன் தமிழகம் முழுவதும் நக்கீரன் வார இதழுக்கு எதிராக அ.தி.மு.க வினரால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் உள்ளது.
நக்கீரன் இதழ் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் கடையில் விற்பனை செய்யக் கூடாது எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரம் நக்கீரன் இதழின் அட்டையில் மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரையே தாக்குதலுக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் தொடர்பான சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை.