About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 7, 2012 / பகுதி: விளையாட்டு /

ரெஸ்ட் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்க அணி வென்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 580 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘பொலோ ஒன்’ செய்ய வேண்டி ஏற்பட்ட இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது.

எனினும் இலங்கை அணியால் இரண்டாவது இன்னிங்ஸிற்காக 342 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

இந்நிலையில் இரண்டு இன்னிங்ஸிலும் தென்னாபிரிக்க அணியை விட இலங்கையால் 1 ஓட்டத்தையே அதிகமாக பெறமுடிந்தது. இதனால் 2 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கு தென்னாபிரிக்க அணிக்கு வழங்கப்பட்டது.

இதனால் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை மிக இலகுவாக பெற்றது. இதனால் 2 க்கு 1 என்ற அடிப்படையில் ரெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.