
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 57 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 130ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாக்தாத் நகரின் அல்-அமில், ஹலாவி, கராடா உள்ளிட்ட 13 இடங்களில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈராக்கின் உள்நாட்டு விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களால் ஈராக்கில் ஒருவகை பதற்றம் சிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலின் பின்னணியில் இருப்போர் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. எந்தவொரு இயக்கமும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவு இல்லை.
ஆனால் ஈராக் மீது இவ்வாறு ஒன்றிணைந்து திட்டமிட்ட தாக்குதல் நடத்த அல்-கய்தா இயக்கம் ஒன்றே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.