ஈழமுரசு இதழை வெளியிட்டு வந்த பூபாளம் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரும், தற்போதைய ஊடக இல்லத்தின் தலைவருமான 'பிரான்சிஸ் மாமா' (பிரான்சிஸ் அந்தோனி) (வயது 60) அவர்கள் இன்று (16.12.2011) வெள்ளிக்கிழமை பரிசில் சாவடைந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் அறியத் தருகின்றோம்.
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மண்ணில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மிகவும் உறுதியோடும், நம்பிக்கையோடும் செயற்பட்டுவந்த பிரான்சிஸ் அந்தோனி அவர்களின் இழப்பு, ஊடக இல்லத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகவே கருதுகின்றோம்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
- ஊடக இல்லம்.