About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 9, 2011 / பகுதி: விடுப்பு /

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் எனப்படும் யானை இனம் பூமியில் வாழ்ந்து வந்தது.

யானை போன்ற தோற்றம் உள்ள இந்த மமொத்கள் 16 அடி உயரம்வரை வளரும். இதன் தந்தங்கள் ஆசிய நாட்டு யானையினுடையதைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.

சுமார் 8 -12 டென் எடைகொண்டதான இந்த மமோத்களும் யானைபோன்றே சுத்த சைவம். இலை தளைகளை தின்று வாழும். இதன் உடல் முழுவதும் ரோமங்கள் அடர்ந்து காணப்படும்.

இந்த மமோத்களை ஆதிகால மனிதர்கள் அதன் ரோமத்திற்க்காகவும் உணவிற்காகவும் வேட்டையாடினர். தட்ப வெட்ப மாறுதல் காரணமாகவும் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டது.

இந்த நிலையில் சைபீரிய நாட்டில் மமோத்தின் எலும்பு ஒன்று பனிக்கட்டிகளுக்கு அடியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. இதனை ஆராய்ச்சி செய்த ரஷ்ய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள், இதன் எலும்பில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.வை யானையின் கருமுட்டையில் செலுத்தி மீண்டும் இந்த மமோத் இனத்தை உருவாக்கமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி எதிர்வரும் 2012 ம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் வெற்றிபெறும்பட்சத்தில் இந்த மமோத் இனம் மீண்டும் புவியில் வலம்வரும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.