About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Dec 8, 2011 / பகுதி: இந்திய செய்தி /

கொளத்தூர் புலியூரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதி தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.2011 அன்று  மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இந்தியாவில் 1984 ஜனவரி முதல் 1986 நவம்பர் வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கும்பாரப்பட்டி, புலியூரில் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது.

முகாமிற்கு தலைமைப் பொறுப்பேற்று பயிற்சி அளித்த தளபதி பொன்னம்மான் நினைவாக புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதி பொதுமக்களால் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் எழுப்பப்பட்டது.

தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.2011 அன்று மாலை 06.05 மணியளவில் பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்டத்தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமையில் தாயக மாவீரர் பாடல் ஒலிக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மறைந்த மாவீரர்களுக்கு கவிஞர் அறிவுமதி முதன்மை சுடரை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அண்ணன் அவர்களைத் தொடர்ந்து கொட்டும் மழையிலும் குழந்தைகள் பெண்கள் உட்பட தொடர்ந்து அங்கு கூடியிருந்த 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈகச்சுடர் ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். தோழர் சமர்ப்பா குமரன் எழுச்சி இசையைத் தொடர்ந்து கி.முல்லைவேந்தன், டைகர் பாலன், கனகரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கவிஞர் அறிவுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பயிற்சி காலத்தில் புலியூர் பகுதி பொதுமக்களிடம் புலிகள் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்தனர், நாட்டில் தேசியத் தலைவர் அவர்கள்

போராளிகளை எப்படி தாய் உள்ளத்தோடு வழிநடத்திச்சென்றார், சிங்கள இராணுவத்தினர் புலிகளிடம் சிறைபட்டால் அவர்களை சிங்களவனைப் போல சித்திரவதை செய்யாமல் எப்படி மரியாதையுடன் நடத்தினார்கள் என்பவற்றையெல்லாம் விளக்கி விரிவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி இப்பகுதியில் 1990 முதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்  முன்னின்று சிறப்பாகச் செய்தனர்.

 


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.