Dec 7, 2011
/
பகுதி: இந்திய செய்தி
/
தமிழகத்தில் கேரள கடைகள் உடைப்பு
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கேரள ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைகள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. மேலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும் கேரள கடைகளை அடைக்கச் சொல்லி குமாரபாளையம் ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் மிரட்டல் விடுத்ததை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சையிலும் கேரள கடைகள் அடித்து நொக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக இந்த கடை உடைப்பு என தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.