About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Jan 28, 2009 / பகுதி: வரலாறு /

வரலாற்றுச் சுருக்கம்

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும்இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.

 

ஈழத்தமிழரை பொறுத்தவரையில் எங்களுடைய வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றான்டு காலம் தொடர் வரலாற்றைக் கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றாண்டு காலம் தொடர் வரலாற்றை கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது எழுதப்படுவதற்கு முன் நிலவிய குறுனிக் கற்கால பண்பாட்டுடன் ஆரம்பமாகி பெருங்கற்காலப் பண்பாடு கதிரமலை அரசு சிங்கைநகர் அரசு என இருந்த போதும் கி.பி 09ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டுவரை சோழர்களின் ஆட்சியில் இவர்களை அடுத்த 13ம் நூற்றாண்டில் இருந்து யாழ் இராச்சியம் ஊடாக ஒரு தொடர் வரலாற்றைக் கொண்டிருந்த மக்களாகவே ஈழத்தமிழருடைய வரலாறு அமைகிறது.

 

நீண்டகாலமாக தமக்கென இலங்கைத்தீவில் வடக்கு-கிழக்கைக் கொண்ட ஒரு தாயகப் பிரதேசத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த போதும் இதில் தமெக்கென ஓர் அரசை உருவாக்கி ஈழத்தமிழரிடையே அரசியல் பொருளாதார சட்டதிட்டங்களை மற்றும் தலைவிதியையும் நீண்டகாலமாகவே தீர்மானித்து வந்தார்கள். இதன் நிமித்தம் தேசிய விழுமியங்கள் நன்கு வளர்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டுமே வந்துள்ளது.

 

19ம் நூற்றாண்டின் பின் ஈழத்தமிழரின் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதியும் மற்றும் அரசுரிமையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு மாறியதும் தேசிய விழுமியங்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு இறுதியில் தாயகப்பகுதியும் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டதோடு ஈழத்தமிழர் தனது தன்னாட்சி உரித்தை முற்று முழுதாக இழந்தனர். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் ஈழத்தமிழரின் அரசியல் தலை விதியை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் கையளித்தே இன்று ஈழத்தமிழர்கள் இழந்த தமது தன்னாட்சி உரித்தை வென்றெடுக்கவே ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றன.

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass