About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 9, 2010 / பகுதி: செய்தி /

மனிதநேய நடைப்பயணத்தை வாழ்த்துகின்றோம் - வன்னிமக்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்ளும் ஜெகன், தேவகி மற்றும் வினோத் அவர்களுக்கு வன்னிமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை  மேற்கொள்ளப்படவேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை ஸ்ரீலங்காவை புறக்கணிக்கவேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு கடந்த மாதங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபைநோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட சிவந்தனை வாழ்த்தி நிற்பதுடன் பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் சிவந்தன் ஏந்திய தீ அணையாது தொடர்வதோடு நின்றுவிடாமல் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின் கதவுகளை தட்டவேண்டும். அப்போதுதான் வன்னி வாழ் எங்களின் வாழ்வில் விடிவு கிடைக்கும்.

வன்னி மக்களாகிய எங்களுக்கு அறியப்பட்டவர்தான் ஜெகன் அங்கிள். தனது வயது முதிர்ந்த காலத்திலும் தமிழ் மக்களுக்கு நீதிவேண்டி மனிதநேய நடைப்பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இன்றும் நாங்கள் வன்னியில் வதைமுகாம் வாழ்கையினைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். விடுதலைக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஆசியுடன் இந்த விடுதலைத்தீப்பயணம் தொடரவேண்டும் என வேண்டுகின்றோம்.

பெல்ஜியம் - ஐரோப்பிய ஒன்றிய தலையைகம் நோக்கியான மனிதநேய நடை பயணத்தினை வாழ்த்துகின்றோம்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மூச்சுடனும் மாவீரர்களின் ஆசியுடனும் தமிழ் மக்களின் விடுதலைப்பயணம் உலகப்பரப்பில் தொடர வன்னி மக்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றோம்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......