கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மேலும் 5 மாதங்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்குமாறு காலநீடிப்பு வழங்கியது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.