குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி நேற்றுக் காலை 10.30 மணியளவில் புறப்பட்ட குமுதினிப் படகு நடுக்கடலில் பழுதானதால் பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரலிட்டனர். இச் சம்பவம் குறித்து உடனடி யாக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டு, அவசரப் பணிப்பின் பேரில் மற்றுமொரு படகுகொன்று சம்பவ இடத்துக்கு விரைந்து குமுதினிப் படகை இழுத்துச் சென்றது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றுக் காலை 10.30 மணி யளவில் குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்ட குமுதினிப் படகு நயினாதீவு எல்லையைக் கடந்து நடுக்கடலில் சென்ற போது திடீரெனப் பழுதானது. இதனையடுத்து படகு அலையின் தாக்கத்தினால் தள்ளாடியது. அதில் பயணித்த சுமார் 120 பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரல் இட்டனர்.
இது குறித்துப் படகிலிருந்து பயணி ஒருவர் நெடுந்தீவு அரச அதிபர் திருலிங்கநாதனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். இந் நிலையில் நெடுந்தீவு கடற் றொழில் சமாசத்துக்குச் சொந்தமான படகு உடனடியாக அனுப்பப்பட்டுக் குமுதினிப் படகைக் கட்டி இழுத்துக் கொண்டு நெடுந்தீவுக்குப் புறப்பட்டது.
குமுதினிப் படகு பழுதாகிய நிலையில் சுமார் ஒரு மணிநேரம் கடலில் தள்ளாடியதாகவும் பயணி ஒருவர் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் பல தடவைகள் இடம் பெற்றபோதும் எந்தவொரு அதிகாரியின் கவனத்தையும் ஈர்க்கவில்லை என பயணிகள் பேசிக்கொண்டனர்.