வடதமிழீழத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதமானோர் மிளகாய் செய்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா விவசாய திணைக்களத்தில் செயற்றிட்ட பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் விவசாய இரசாயன பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளமை மற்றும் நீர்பாசனத்தை மேற்கொள்வதில் உள்ள நெருக்கடி போன்றவையே இந்த நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2006 ம் ஆண்டளவில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 1069 ஹெக்டயர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், 2009 ம் ஆண்டளவில் அந்த அளவு 207 ஹெக்டயர்களாக துரித வீழ்ச்சிப் போக்கை கண்டுள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.