About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 7, 2010 / பகுதி: அறிக்கை /

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு விடுக்கும் அறிக்கை

எம் தேசத்தின் விடுதலைப்பயணத்திலே புலம்பெயர் தமிழ்ச் குமூகத்தினராகிய நாம் இன்று அனைத்துலகத்தின் கண்களை எம் பக்கம் திருப்புவதற்காகவும், எம் தேசத்தின் உண்மை நிலைமையை உணர்த்துவதற்காகவும் முறை கேட்டு, மக்களாட்சி முறையிலே எமது போராட்டங்களை முன்னெடுத்துத்துச் செல்கின்றோம்.

அந்த வகையிலே பிரித்தானியாவில் இருந்து எம் சகோதரன் சிவந்தன் ஏற்றிய தீ இன்றும் தொடர்கின்றது. அதன் தொடராக இன்று எம் சகோதரி திருமதி தேவகி குமார் அவர்களும், மற்றும் எம் சகோதரர்கள் திரு. ஜெகன் அவர்களும், திரு. வினோத் அவர்களும் கடந்த 27.08.2010 அன்று தொடக்கம் தமது நடைவழிப்பயணத்தை ஜரோப்பிய ஒன்றியம் நோக்கி தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

எம் தாயக தேசத்திலே எமது தேசியத் தலைவர் அவர்களின் நேரடி உருவாக்கத்தின் கீழ் உலகமே வியர்க்கும் அளவிற்கு பல சாதனைகளைப் படைத்தார்கள் எம் சகோதரிகள். அந்தவகையிலே இன்று புலம்பெயர் மண்ணிலே எமது சகோதரி திருமதி தேவகி குமார் அவர்கள் எம் தேசத்தின் விடுதலைக்காகவும், எம் மண்ணிலே எமது உறவுகள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும், அனைத்து உரிமைகளுடனும் எமது தாயக மண்ணிலே வாழவேண்டும் என்பதற்காகவும் இன்று இந்த போராட்டத்தை வீறுகொண்டு தடம்பதித்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்.

அவரின் இந்த போராட்டம் எந்தவிதமான தடையுமின்றி வெற்றியுடன் முடிவடைய வேண்டும் என்று பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினராகிய நாம் பெருமிதத்துடன் வாழ்த்துகின்றோம்.
நன்றி.

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......