About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 6, 2010 / பகுதி: உலக வலம் /

பாகிஸ்தானில் இன்று தற்கொலை கார் குண்டுத்தாக்குதல் : 17 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் 3 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெஷாவர் நகரின் தெற்கே கைபர் பிராந்திய லக்கிமாவத் நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பாடசாலைப் புத்தகங்களும், பை ஒன்றும் கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலியானவர்களில் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

வெடி பொருட்களை ஏற்றி வந்த வாகனம், பொலிஸ் நிலையத்தின் சுவரில் மோதுவதற்கு முன் அவ்வழியாகச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றுடன் மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்துக்கு அருகிலிருந்த கடையொன்றும் பள்ளிவாசல் ஒன்றும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. லக்கிமாவத் நகர் கடந்த காலங்களில் பல குண்டுத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, புது வருட தினத்தன்று வொலிபோல் விளையாட்டு ரசிகர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 100 பேருக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரம் பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் பலியாகியிருந்தனர்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......