About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 6, 2010 / பகுதி: உலக வலம் /

பிரிட்டனில் பொருளாதார சீரழிவு : அடகு கடைகளுக்கு கிராக்கி

உடனடி பணத் தேவைகளுக்காக பிரித்தானிய மக்கள் தற்போது அடகு கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் அடகு பிடிப்போரின் தொழில் வளர்ச்சி உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளது. அடகு கடைகளும் 2003 இல் இருந்ததை விட இரு மடங்கு அதிகமாக பெருகியுள்ளது.

வங்கிகள் மக்களுக்கு எளிதான கடன்களை கொடுக்க ஆரம்பிக்காத வரை தங்களுடைய தொழில் அபரிமிதமான வளர்ச்சி காணும் என ஆருடம் சொல்கிறது தேசிய அடகு பிடிப்போர் கழகம்.

20 வருடங்களுக்கு முன்னால் அழிந்து விடும் என நம்பப்பட்ட அடகு கடைகள் தற்போது புற்றீசல் போல் பெருகி அசுர வேகத்தில் வளர்ந்து வருவதோடு இளம் தலைமுறையினரையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்னால் லீமிங்டன் ஸ்பாவில் அடகு பிடிக்கும் தொழிலை ஆரம்பித்த பால் காக்கல் என்பவர் தொழிலில் தற்போது பத்து மடங்கு வளர்ச்சி காணப்படுவதாக கூறுகிறார்.

அதே போல் அடகு கடை நடத்தும் பலரும் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு உடனடியாக பணம் கொடுக்க முடிவதால் தங்கள் தொழில் நல்ல நிலையில் போய்க் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......