வவுனியா இடுகாட்டில் சடலத்தின் எச்சங்கள் மீட்பு!

வவுனியா சமணங்குளம் இடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மீட்கப்பட்ட ஆவணங்களின் குறிப்பின் படி இறந்தவர் உப்புக்குளத்தைச் சேர்ந்த பி.முத்தையா (வயது 60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன் சடலம் பல நாள் சென்றுள்ள நிலையில் மண்டையோடு மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் என சந்தேகிக்கப்படுபவரின் ஆடைகள், பாதணி மற்றும் சில ஆவணங்களும் காவல்துறையினரால் மீட்கப்ட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆவணத்தில் பி.முத்தையா உப்புக்குளம் வயது 60 என்ற தகவலுடன் வைத்தியசாலை மருந்து பற்றுச்சீட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளன என வவுனியா சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments