கிளிநொச்சியில் ரயில் மீது கல்வீச்சு


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.

நேற்ற இரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த இரவு தபால் புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதில் புகையிரதத்தின் கடைசிக்கு முதல் பெட்டியில் பயணித்த பயணியொருவர் குறித்த கல்லெறி தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார்.

இதனையடுத்து புகையிரத்தின் அவசர நிறுத்தல் பட்டி (பிறேக் லிவர்) இழுக்கப்பட்டு புகையிரதமானது இரணைமடு உள் கிராமம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டது.

இதனால் அப் பகுதி கிராமம் மக்கள் அப் பகுதியில் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இருந்த போதிலும் நடந்த சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து புகையிரத பயணம் தொடர்ந்ததுடன் காயமடைந்தவரை அடுத்த புகையிரத நிலையம் ஊடாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

No comments