எரியூட்டப்பட்ட வாடிகளை மீளமைக்கும் முன்னணி?


நாயாறு பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாடிகளை கட்டியெழுப்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வந்துள்ளது. நாயாறு கடற்தொழில் சங்க தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மக்கள்களை இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர்.

முன்னயின் சர்வதேச விவகாரங்களிற்கதன அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் சந்தித்ததுடன் மீன்வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றியும் தற்போதைய தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.

அத்துடன் எரியூட்டப்பட்ட வாடிகளை புனரமைக்க உதவிகளை வழங்குவதாகவும் அப்போது உறுதி மொழிவழங்கப்பட்டுள்ளது.

No comments