சிங்களத்தின் பிரதிநிதிகளாக தமிழகம் செல்லும் தமிழர்கள்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மறைந்த மு.கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக, இலங்கைப் பிரதமர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனும் சபாநாயகர் சார்பில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதனும், இன்று (08) காலை, சென்னை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இவர்களுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகர் ஆகியோரும் பயணித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments