தமிழர்களது வாடிகளுக்கே தீ ?


இன்றிரவு சற்று முன்னர் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு.

இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் இதுவரை 8 வாடிகள் 3 படகுகள் , 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 12ம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் வருகை தந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான இன்று(13) இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாயாறு பகுதியில் தனி ஒருவர் 40 படகுகள் வைத்து தொழில் செய்வதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் மத்திய மீன்பிடி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களிடம் சுட்டிக்காட்டிய பகுதியில் உள்ள தமிழர்களது வாடிகளுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வாடியில் இருந்த மீனவர்களது பல லட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொலிசாரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

No comments