ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் புதிய ஆணையாளர் நியமனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனத்திற்கு அங்கீகரிக்காரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன் இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்தப் புதிய நியமனம் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே ஹுஸைனின் பதவிக்கு சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments