முல்லையில் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது!


தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் தரப்புக்களை வேட்டையாடுவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதலில் தொடர்புபடுத்தியே அவர் கைதாகியுள்ளார்.

தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி மீனவ அமைப்புக்கள் நடத்திய முற்றுகைப்போராட்டம் தொடர்கின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தின ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட அரச சொத்துக்களை தாக்கி சேதமாக்கிய குற்றசாட்டின் கீழ் அவரை கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

மீனவ அமைப்புக்களது போராட்டத்திற்கு து.ரவிகரன் தலைமை தாங்கியிருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி முன்னணி செயற்பாட்டாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை பதிவு இணையம் முதலில் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments