கோப்பாயில் விபத்து ஒருவர் பலி


யாழ்.கோப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பெற்றோல் பவுசருடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனப்படும் நகை வேலை செய்யும் நபர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் பயணித்த தண்ணீர் பவுசர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ரஞ்சன் எனப்படும் 50 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 19 வயதுடைய அவரது  மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments