வல்வைப்படுகொலை 29ஆம் ஆண்டு நினைவு நாள்

இந்திய அரசின் வல்வைப்படுகொலை ஆரம்ப நாள் 1989
(2,3,4 ஆகஸ்ட் )29ஆம் ஆண்டு நினைவு நாள்


அமைதி நிலை நாட்டுகிறோம் என வந்த தன் பிராந்திய நலன் கொண்ட இந்திய அமைதிப்படை. ஈழ தேசத்தில் தன் முகமூடியை அப்பட்டமாக கழட்டி எறிந்த மேலும் ஒருநாள் வல்வைப்படுகொலை_நாள்.
1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் மோதலில். 09 இந்திய இராணுவம் பலியானதுக்காக 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் மிக கோரத்தாண்டவம் ஆடியது இந்திய இராணுவம்.
63 பொதுமக்கள் கொல்லப்பட்டும்
100 க்கு மேற்பட்ட மக்கள் பெரும் காயப் படுத்தப்பட்டும்
123 வீடு முற்றாக எரித்து சாம்பலாக்கியும்
45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டும்
175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தும்
முழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாக்கியது இந்திய இராணுவம்.


இந்நாளில் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று காலை 10:00 மணியளவில் வல்வெட்டித்துறையில். வல்வைப்படுகொலையில் இறந்த மக்களுக்காக கண்ணீர் வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.

No comments