சுசிற்சர்லாந்தில் இரு வானூர்த்திகள் விபத்து! 24 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் இரு வானூர்திகள் வீழ்ந்து நொருங்கியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல் சம்பவமாக நேற்று சனிக்கிழமை சுவிற்சர்லாந்து மத்திய பகுதியில் சிறிய ரக வானூர்தி பறப்பில் ஈடுபட்ட போது, அந்த வானூர்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காட்டுப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது.

நான்கு பேர் உயிரிழந்த முதலாவது வானூர்தி விபத்து
குறித்த வானூர்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த வானூர்த்தி விபத்து மீட்புப் பணிகள் நடத்துகொண்டிருந்தவேளை மற்றொரு வானூர்தி சுவிற்சர்லாந்தின் கிழக்குப் பகுதியில் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது தரையில் வீழ்ந்து நொறுங்கியது.

இருபது உயிரிழந்த இரண்டாவது வானூர்தி விபத்து

இரண்டாவது வானூர்தி விபத்தில் இரு வானோடிகள், வானூர்த்தி பணியாளர் உட்பட 17 பயணிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.

விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை எனக் கூறப்படுகின்றது.



No comments