மன்னாரில் தீ! 1,500 பனைகள் எரிந்து நாசம்!

மன்னார், ஓலைத் தொடுவாய் பகுதியில் 1,500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது என மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

பனைகளில் தீபற்றி எரிந்தபோது மக்களும், படையினரும் தண்ணீர் கொள்கலன்களுடன் நீரை கொண்டுவந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்ததாகக் கூறப்படுகிறது.

இத்தீயினால் சுமார்  1,500 பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன என முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. பனைகள் மூலம் பரவிய தீ இறுதியில் இரு வீடுகள் மீதும் பரவியது எரிந்துள்ளது.

No comments