அமைச்சர் பதவியை இழக்கிறாரா விஜயகலா?

விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி யி­லி­ருந்து தற்கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்குத் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி சே­ன­வுக்­குப் பரிந்­து­ரைத்­துள்ளார் என தகவலகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

நேற்று முன்தினம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

எதிர்க்கட்சியினரின் அழுத்தங்களை அடுத்து இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­துத் தொடர்பிலான விசா­ர­ணை­கள் நிறை­வ­டை­யும் வரை அவரை இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யில் இருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தே ரணிலின் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.

அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­தில் அர­ச­மைப்போ அல்­லது தற்­போ­தைய சட்­டமோ மீறப்­பட்­டி­ருக்­கு­மா­யின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு சபாநா­ய­கர் அறி­வித்­துள்­ளார்.

அது தொடர்­பில் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை ஆளும் மற்­றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்து, இந்­தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டார் என்று சபா­நா­ய­கர் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.


No comments