தீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா?



வல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத்தூபி அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது வல்வெட்டித்துறை நகரசபை.

தீருவில் பொதுப் பூங்காவில் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவுத் தூபி மட்டுமே அமைக்கப்படக்கூடாது மாற்று இயக்கங்களுக்கும் அதே இடத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை நிரா­க­ரித்து அனைவருக்கும் நினை­வுத் தூபி அமைக்­கும் தீர்­மா­னத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 6 உறுப்பினர்­க­ளும், ஈ.பி.டி.பி.யின் இரண்டு உறுப்­பி­னர்­க­ளும் இணைந்து நிறை­வேற்­றி­னர்.
.
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் பொன்­னம்­ப­லம் சிவ­ஞா­ன­சுந்­த­ரம் தீர்­மா­னத்தை முன்­வைத்­தார்.

‘விடு­த­லைக்­கா­கப் போரா­டிய அனைத்து இயக்­கங்­க­ளின் போரா­ளி­கள், படை­யி­ன­ரா­லும் இனவெறி­யா­ளர்­க­ளா­லும் கொல்­லப்­பட்ட ஒரு இலட்சத்துக்­கும் மேற்­பட்ட தமிழ் மக்­கள் நினைவாக­வும் ஓர் நினை­வுத் தூபி அமைக்­க­வேண்­டும். கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­பட 12 மாவீ­ர்கள் நினை­வுத் தூபியை முத­லில் கட்டி முடிக்­க­வேண்­டும். அதன் பின்­னர் மற்றைய நினை­வுத் தூபி­யைக் கட்­ட­வேண்­டும்’ என்ற தீர்­மா­னத்தை முன்மொ­ழிந்­தார்.

குறிப்பாக ஈபிடிபி, புளொட் போன்ற சிறீலங்கா படைகளின் ஒட்டுக்குழுக்களுளோடு இணைந்து தமிழ் மக்களைக் கொன்ற குவித்த துரோகக் குழுக்களுக்கும் இங்கே நினைவுத் தூபி அமைப்பதற்கு தீர்மானம் எடுத்திருப்பது வருத்தத்துக்குரியதே.

சபை­யின் கடந்த அமர்­வி­லும் இதே தீர்­மா­னம் முன்­மொ­ழி­யப்­பட்டு அது தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­ன­ரால், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளுக்கு மாத்­தி­ரம் நினைவுத் தூபி அமைக்­கும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

கடந்த அமர்­வில் தோற்­க­டிக்­கப்­பட்ட தீர்­மா­னம் மீள­வும் சபைக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு எதிர்கட்சி உறுப்­பி­னர்­கள் எதிர்ப்­புத் தெரிவித்­த­னர். தோற்­க­டிக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தில், திருத்தங்கள் மேற்கொண்டு நான்கு உறுப்­பி­னர்­கள் கையெ­ழுத்­திட்­டால் அந்­தத் தீர்மா­னத்தை மீளவும் சபைக்கு கொண்டு வர­மு­டி­யும் என்று தவி­சா­ளர் தெரி­வித்­தார். தீர்­மா­னம் தொடர்­பில் உறுப்பி­னர்­க­ளின் கருத்­துக் கேட்கப்­பட்­டது.

இயக்­கம் இருந்­தால் இவ்­வாறு ஒரு தீர்­மா­னம் கொண்டு வரு­வீர்­களா? அது இயக்­கத்­துக்­கு­ரிய புனித­மான இடம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்ட­மைப்­பின் உறுப்­பி­னர் கந்­த­சாமி சதீஸ் தெரிவித்தார். சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர் கணே­ச­மூர்த்தி கஜன், இலங்கை – இந்­திய கூட்­டுச் சதி­யால் கொல்­லப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் வீரர்களுக்கு மாத்­தி­ரமே அங்கு தூபி­அ­மைக்­கப்­பட வேண்­டும். அங்கு மாற்­றுக் கட்­சி­கள், இயக்­கங்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது. அவ்­வாறு ஏனை­யோ­ருக்கு தூபி அமைக்­கப்­ப­டு­வ­தன் ஊடாக, கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்ளிட்ட 12 வேங்­கை­க­ளின் தூபியை – வர­லாற்­றுச் சின்னத்தை அழிக்­கும் செயற்­பா­டா­கவே பார்க்­க­வேண்­டி­யி­ருக்­கும் என்று சுட்­டிக்­காட்­டி­னார்.

சபை­யில் குழப்­ப­நி­லமை தோன்­றி­யது. தவி­சா­ளர் தீர்­மா­னம் மீது வாக்கெடுப்பு நடத்­தி­னார். தீர்மானத்­துக்கு ஆத­ர­வாக, தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்­பின் உறுப்­பி­னர்­கள் 6பேரும், ஈ.பி.டி.பியின் இரண்டு உறுப்பி­னர்­க­ளும் வாக்­க­ளித்­த­னர். (கடந்த அமர்­வில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்­கள், கூட்டமைப்­பின் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்களித்திருந்­த­னர்.)

சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர்­கள் 4பேர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி உறுப்­பி­னர் ஒரு­வர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் க.சதீஸ் ஆகி­யோர் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­த­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர் ஒரு­வர் தீர்­மா­னம் விவா­திக்­கும் போது சபை­யில் இருந்து அதனை எதிர்த்­தி­ருந்­தார். அலை­பேசி அழைப்பு வந்த­தும், வாக்­கெ­டுப்­பில் பங்­கேற்­கா­மல் வெளியேறி­னார்.

கூட்­ட­மைப்­பின் தீர்­மா­னம் ஒரு மேல­திக வாக்­கி­னால் நிறை­வே­றி­யது. இத­னை­ய­டுத்து வாக்­க­ளிப்பை எதிர்த்த 7 உறுப்­பி­னர்­க­ளும் வெளிநடப்புச் செய்­த­னர். அடுத்த அமர்வை நடத்த விடமாட்டோம். சபையை முடக்­கு­வோம். மக்­களை அணி­தி­ரட்­டிப் போராட்­டம் நடத்துவோம் என்று தெரி­வித்­த­னர்.

No comments